News November 7, 2025
குற்றாலம்: டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாலையில் வல்லம் சிலுவை முக்கு பகுதியில் காசி மேஜர்புரம் பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது வல்லத்திலிருந்து சிலுவை முக்கு நோக்கிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. கடுமையான வேகத்தில் சென்ற மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக பலியானார். குற்றாலம் போலீசார் விசாரணை.
Similar News
News November 7, 2025
தென்காசி: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News November 7, 2025
தென்காசி: வாலிபருக்கு பாலியல் தொல்லை – 2 பேர் கைது

பிரவீன் (24) என்பவரை, சமூக வலைதள செயலி மூலம் அறிமுகமான முகம்மது காதி (18) மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று இரவு சங்கரன்கோவிலுக்கு வரவழைத்துள்ளனர். பிரவீனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது மோதல் முற்றியுள்ளது. இதில், முகம்மது காதி மற்றும் அவரது நண்பர்கள் பிரவீனை தாக்கி தப்ப முயன்றனர். பொதுமக்கள் முகம்மது காதி மற்றும் கதிர்வேல் (17) ஆகிய இருவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
News November 7, 2025
தென்காசி: சித்திர சபையை தரிசனம் செய்ய தடை

தென்காசி மாவட்டம், இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட திருக்குற்றால நாத சுவாமி கோயிலில் நடராச பெருமாள் திருத்தாண்டவம் ஆடியுள்ள பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையில் திருப்பணி வேலைகள் நடைபெற உள்ளது. எனவே தற்காலிகமாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 04633213298 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.


