News February 4, 2025
குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சிப்காட் பகுதியைச் சேர்ந்த ஹரி என்ற வாலிபரை காவேரிப்பாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார் பிடிக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை, ஹரி கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார். தற்காப்புக்காக போலீசார் ஹரியை காலில் சுட்டு பிடித்தனர். வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News August 24, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News August 23, 2025
இரா.பேட்டை: இனி வீட்டில் இருந்தே வரி செலுத்தலாம்…!

இராணிப்பேட்டை மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. <
News August 23, 2025
ராணிப்பேட்டை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ந் தேதி (28/08/2025) காலை 11 மணி முதல் மாலை 5 மணி நேர வரை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும். விவசாயிகள் தங்கள் பொது மற்றும் தனிநபர் பிரச்சினைகளை கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.