News March 24, 2025

குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

image

மதுரை ஈச்சனேரி பகுதியில் விருதுநகரை சேர்ந்த மலையரசன் என்ற காவலர் மார்ச்18-ல் எரித்து கொல்லப்பட்டார். இதில் வில்லாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூவேந்தரை இன்று அதிகாலை கைது செய்ய முயன்ற போது ஆய்வாளர் மாரி கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூவேந்தர் பணத்திற்காக கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Similar News

News October 31, 2025

விருதுநகர்: கிராமப்புற வங்கியில் வேலை! APPLY NOW

image

விருதுநகர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ. 15க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை. இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவல். உடனே SHARE பண்ணுங்க.

News October 31, 2025

விருதுநகர்: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News October 31, 2025

விருதுநகர்: பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்!

image

சிவகாசி அருகே ஆனையூரில் உள்ள தொழிலக பாதுகாப்பு அலுவலகத்தில், பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேதிப்பொருள் கலவை, மருந்து செலுத்துதல் உள்ளிட்ட வெடிபொருள் பாதுகாப்பு விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு தொழிலாளர்களை அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு நவ. 10 முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!