News July 5, 2025

குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: ஈஸ்வரன்

image

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளரும், எம்எல்ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று இருகூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மரணம் காவல்துறையின் மனிதாபிமானமற்ற செயல். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு சில காவலர்களின் தவறுகளால் மொத்த காவல்துறை, அரசு, முதலமைச்சருக்கு களங்கம் ஏற்படுகிறது என்றார்.

Similar News

News July 5, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

கோவை: இபிஎஸ் பிரச்சார பயண திட்டம்

image

இபிஎஸ் பிரச்சார பயண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 7 காலை 9 மணிக்கு வனபத்ரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது. மாலை 4.35 மணி அளவில் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் காந்தி சிலையில் இருந்து பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ. பின் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

News July 5, 2025

கோவையில் வேலை வாய்ப்பு!

image

கோவை பீளமேட்டில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Trainee technician பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. டிப்ளமோ முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!