News September 1, 2025
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வைசாலி நகரில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நள்ளிரவில் ராஜ் கமல் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நேற்று மாலை திருப்பாச்சூர் கொண்டஞ்சேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
Similar News
News September 4, 2025
திருவள்ளூர் அருகே குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர், கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 7 வயதில் சுபாஷினி, 1 வயதில் ஜெய்கிருஷ் என்ற குழந்தைகள். இந்நிலையில் நேற்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஜெய்கிருஷ், அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார்.
News September 4, 2025
திருவள்ளூர் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 3, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.