News June 22, 2024

குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது புகார்

image

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி கூறியதாவது: “அலங்காநல்லூர் கூட்டுறவு ஆலைகளில் கரும்பு பதிவு செய்ய சிவகங்கை, தேனி தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அதிகாரம் இல்லை.
எனவே, பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

Similar News

News September 7, 2025

மதுரை: தொலைந்த சான்றிதழ் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.<> இந்த செயலி மூலம் <<>>உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 7, 2025

மதுரை: EEE, B.Sc, B.Tech போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. (வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 7, 2025

மதுரையில் ரூ.2.30 லட்சம் பறிமுதல்

image

மதுரை வடக்குமாசி வீதி டாஸ்மாக் கடை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதில் கரிமேடு ராஜேந்திரன் (67), நாகமலைபுதுக்கோட்டை சக்திவேல் (44), முண்டுவேலம்பட்டி ஜெயபால் (45), பொன்னகரம் சின்னவெங்கையன் (55), ஆண்டிப்பட்டி தேவேந்திரன் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 283 மதுபாட்டில்கள், ரூ.2.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!