News December 26, 2025
குறைந்த வட்டியில் கடன்: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது. ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும், 18 – 60 வயதுக்குட்பட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
நாகை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
நாகை: பயிர் கணக்கெடுப்பு பணிக்கு அழைப்பு

நாகை மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் படித்த இளைஞர்கள், பெண்கள் ,மற்றும் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
நாகை: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய நாகை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க


