News August 25, 2025
குறைதீர் முகாமில் 543 மனுக்கள் பெறப்பட்டது

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று (ஆக.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்களிடமிருந்து புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகைகள்,உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 543 மனுக்கள் வரப்பெற்றதாக ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.
Similar News
News November 14, 2025
தருமபுரி: இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

தருமபுரி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04342-260042) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 14, 2025
தருமபுரி: ரயில் சேவையில் மாற்றம்!

தருமபுரி மார்க்கத்தில் தண்டவாள பணிகள் நடைபெறுவதால் நவ.16ம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, பெங்களூர்-எர்ணாகுளம் ரயில் தருமபுரி வழியாக செல்லாமல், திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-காரைக்கால் (16529) ரயில், பையனப்பள்ளி வழியாக சேலம் செல்லும். பெங்களூர்-கோவை வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
தருமபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


