News September 29, 2025

குறைகளை களையவே ஆணையம்: அருணா ஜெகதீசன்

image

தமிழகத்தையே உலுக்கிய கரூர் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் கரூருக்கு சென்று விசாரணையை துவக்கினார். இதுகுறித்து அவர் பேசுகையில், குறைபாடுகளை களைவதற்காகவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்பதை பரிந்துரைப்போம் என்றார்.

Similar News

News September 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 473 ▶குறள்: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். ▶பொருள்: தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

News September 29, 2025

ஆசிய கோப்பை டிராபியை வாங்க இந்தியா மறுப்பு

image

9-வது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கோப்பை மற்றும் பதக்கங்களை பாக்., முன்னாள் அமைச்சரும், ACC தலைவருமான மொஷின் நாக்வியிடம் இருந்து பெற இந்தியா மறுத்துள்ளது. அதற்கு பதிலாக, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கோப்பையை பெற இந்தியா விரும்புகிறதாம். இருப்பினும், ஆட்டநாயகன் விருதுகள் வழங்கப்பட்டுவிட்டன.

News September 29, 2025

மரணத்துக்கு முன்… திடுக்கிடும் உண்மை

image

மரணம் சம்பவிக்கும் முன் மூளையில் என்ன நடக்கிறது என்ற மனித குலத்தின் நீண்டகால புதிருக்கு விடைக் கொடுத்துள்ளது லூயிஸ்வில்லி யுனிவர்சிடியின் லேட்டஸ்ட் ஆய்வு. மரணத்துக்கு முன், நம் மூளை அதிவேகமாக வாழ்க்கையின் முக்கிய நினைவுகளை மீட்டெடுத்து, மனக்கண் முன் நிறுத்துவதை கண்டறிந்துள்ளனர். இது, மரணத்துக்கு அப்பால் என்ன என்பதை பற்றி புதிய தேடலுக்கு வழிவகுத்துள்ளது. எனில், மூளைச்சாவுடன் வாழ்வு முடிந்துவிடாதா?

error: Content is protected !!