News April 27, 2025

குறுவை சாகுபடிக்கு தேவையான விதை உரங்கள் இருப்பு: ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 39 ஆயிரத்து 208 எக்டேர் பரப்பளவு சாகுபடி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு மொத்த விதை தேவை 1250 டன். தற்போது வரை 204 டன் குறுகிய கால நெல் ரகங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 241 டன் விதைகள் மற்றும் உரங்களும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 27, 2025

மயிலாடுதுறை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

image

தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் குறித்த பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶ வட்ட வழங்கல் அலுவலர், குத்தாலம்-04364-221150, ▶ வட்ட வழங்கல் அலுவலர், தரங்கம்பாடி-9445000308, ▶ வட்ட வழங்கல் அலுவலர், சீர்காழி-9445000309 ஆகிய எங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News April 26, 2025

மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் பலி

image

கருவாழக்கரை மேலையூர் உத்திராபதியார் ஆலய அமுதுபடையல் திருவிழாவிற்க்காக  அமைக்கப்பட்டிருந்த ஒலி ஒளியின் மின் கம்பியை சரியான முறையில் கட்டாததால் அறுந்து கீழே விழுந்ததில் அருகே விளையாடிக் கொண்டிருந்த மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் தமிழ்துரை (வயது15) மின்சாரம் தாக்கி நேற்று இரவு சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுவன் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 26, 2025

மயிலாடுதுறை: 3935 அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பு

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!