News May 19, 2024
குறுந்தகவல் கனமழை எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் இருநாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலா தளங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கவும் பேரிடர் மேலாண்மை துறை அனைத்து மக்களுக்கும் குறுந்தகவல் அனுப்பியுள்ளது
Similar News
News October 13, 2025
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பட்டாசு விற்பனை கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் தடையின்மை சான்று மற்றும் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
News October 12, 2025
விருதுநகர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News October 12, 2025
சாத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(55) சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்று வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சாத்தூரில் இருந்து மீனம்பட்டி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மேட்டமலை அருகே நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.