News September 13, 2025
குரோம்பேட்டை அருகே விபத்து

திருநீர்மலையை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவர் குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து கே.கே.நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்து மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என்பவரை (41) கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 13, 2025
செங்கல்பட்டு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (ம) உதவியாளர் பணிகளுக்கு நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்பட உள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட பதவிகளுக்கு எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 15-ந்தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளதாக கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 044- 2742 6020 என்ற எண்ணை அழைக்கலாம்.
News September 13, 2025
அனகாபுத்தூர்: கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வம் (53). இந்து பாரத முன்னணி மாநில தலைவராக உள்ளார். இவர் பல்லாவரத்தில் இருந்து நிர்வாகிகளுடன் தனது காரில் அனகாபுத்தூர் நோக்கி சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து தாக்க முயன்றதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை செய்து அனகாபுத்தூரைச் சேர்ந்த பாலாஜி, சதாம் உசேன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
News September 13, 2025
செங்கல்பட்டு: ரேஷன் கார்டு இருக்கா? சூப்பர் தகவல்

செங்கல்பட்டு மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க