News March 20, 2025

குரூப் 4 தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் – ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள TNPSC Group -IV தேர்வுக்கான முழு மாதிரித் தேர்வுகள் (Full Mock Test) 21.03.2025, 24.03.2025, 28.03.2025, 02.04.2025 மற்றும் 07.04.2025 ஆகிய தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் தேர்வு எழுதும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 10, 2025

கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர் 

image

தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் காக்கும் வகையில் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு உதவி தொகை ரூ.12,000 வீதம் இரு தவணையாக ரூ.25,000 (ஆண்டுக்கு மட்டும்) வழங்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

வெட்டுடையா காளி கோயிலில் ஏன் காசு வெட்டிப் போடுகிறார்கள்?

image

சிவகங்கை அரியாக்குறிச்சியில் உள்ள வெட்டுடையா காளி கோயில் மாவட்டத்தின் ஒரு முக்கிய கோயிலாகும். இங்கு காளி எட்டு கைகளுடன் அசுரனை வதம் செய்தபடி காட்சி கொடுக்கிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரோகம், நீதி கிடைக்க இந்தக் கோயிலில் காசு வெட்டிப் போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் காளி தட்டிக் கேட்பால் என்பது நம்பிக்கை. மாலையில் காளி மீது சூரிய ஒளி விழும்படி கோயில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு.

News April 10, 2025

காரைக்குடி 1000 ஜன்னல் வீடு பற்றி தெரியுமா?

image

காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு மிகவும் பிரபலமாகும். 1941ஆம் ஆண்டு 20,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட இந்த மாளிகை அந்த காலத்திலேயே சுமார் ரூ.1.25 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த வீட்டில் 25 பெரிய அறைகள் மற்றும் ஐந்து பெரிய ஹால்கள் உள்ளன. மேலும் வீட்டில் சுமார் 20 கதவுகள் மற்றும் 1000 ஜன்னல்கள் உள்ளன. இதன் பாரம்பரியம் மாறாமல் தற்போது வரை இந்த வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. Share It.

error: Content is protected !!