News September 27, 2025

குரூப்-2, 2ஏ- சேலத்தில் 33,424 தேர்வர்கள் எழுத உள்ளனர்!

image

டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான குரூப் தேர்வு-2 மற்றும் குரூப் தேர்வு 2 A தேர்வு வருகின்ற (செப்-28) அன்று முற்பகல் மட்டும் நடைபெறுகிறது. இத்தேர்வு சேலம் மாவட்டத்தில் 7 வட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 33,424 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

Similar News

News September 26, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News September 26, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (26.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.i

News September 26, 2025

சேலத்தில் அண்ணா மிதிவண்டி போட்டி!

image

சேலம் மாவட்டத்தில் 2025- ஆம் ஆண்டிற்கு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் நாளை (செப் 27) காலை மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி. மீ தூரமும், 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!