News July 13, 2024

குரூப் 1 தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி I தேர்வு இன்று (ஜூலை-13) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரி மையத்தினை கலெக்டர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் தொகுதி I தேர்வெழுத 2,687 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,816 நபர்கள் தேர்வெழுதினர். 

Similar News

News November 10, 2025

பெரம்பலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

பெரம்பலூர் மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதல் ,டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதல், எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசு மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் 9498794987 என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

image

பெரம்பலூர் மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்குமுன்பு கடலுக்குள் இருந்ததடாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பழமையான இடங்களை நாம் காண்போம்

➡️வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
➡️கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
➡️பாலதண்டபாணி கோவில் – 800 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து நமது ஊரின் பெருமையை தெரியப்படுத்துங்க…

News November 10, 2025

பெரம்பலூர்: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுபடி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப்பப் படிவங்கள், வீடு வீடாக வழங்கும் பணிகள் கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கணக்கெடுப்பு படிவங்களை, வழங்காதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!