News July 24, 2024
குருவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் சுமார் 60,000 ஏக்கரில் குருவை சாகுபடி நடந்துள்ளது. இந்நிலையில் குருவை சாகுபடிக்கு தேவையான விதை நெல்கள் கோ 55, ஆடுதுறை 63, ஏ.எஸ்.டி 16, ரகங்கள் கையிருப்பு உள்ளதாகவும், மேலும் யூரியா, காம்ப்ளக்ஸ் பொட்டாஸ் போன்ற உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் கையிருப்பு உள்ளதாகவும் வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
திருவாரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
திருவாரூர் தொகுதியில் போட்டியிட எம்.எல்.ஏ விருப்ப மனு

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக நிர்வாகிகள் பலர் விருப்ப மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக மாவட்ட செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.கலைவாணன் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
News March 3, 2026
திருவாரூர் மாவட்டத்தில் 222 பேர் ஆப்சென்ட்

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 02) தொடங்கியது. இதற்கு 6045 மாணவர்கள் 7223 மாணவிகள் என 13268 பேர் 61 தேர்வு மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில் 5941 மாணவர்கள் 7105 மாணவிகள் என 13046 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மொத்தம் 222 மாணவ-மாணவிகள் நேற்று தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


