News April 11, 2024

குருவியை விற்றால் குற்றம்: வனத்துறை

image

ஊட்டி மார்க்கெட்டில் ‘ஜாவா’ குருவிகள் விற்கப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் குருவிகளை மீட்டனர். வனத்துறை அலுவலர் இன்று ( ஏப்.11) கூறுகையில், “ஜாவா குருவி தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பது கடைக்காரருக்கு தெரியாது. முதல்முறை என்பதால் அவருக்கு அறிவுரை மட்டும் வழங்கப்பட்டது” என்றார்.

Similar News

News September 19, 2025

நீலகிரி: யானை தாக்கி முதியவர் பலி!

image

நீலகிரி மாவட்டத்தில் மனித – விலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், மசினகுடி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க மேத்தா என்பவரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 19, 2025

நீலகிரி: எங்கெல்லாம் மின்தடை? தெரியுமா!

image

ஊட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பிங்கர்போஸ்ட், காந்தல், ஹில்பங்க், கோடப்பமந்து, இத்தலார், ஆடாச்சோலை, எப்பநாடு, மரகல், கோழிப்பண்ணை, தாவனை, உள்ளத்தி, சக்தி நகர், தேனாடு, கம்பை, எம்.பாலடா, கடநாடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News September 19, 2025

ஊட்டியில் அரசு பஸ் விபத்தால் பயணிகள் அதிர்ச்சி!

image

ஊட்டி நொண்டிமேடு பகுதியில் இன்டர்லாக் கற்களால் ஆன சரிவான சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. நேற்று முன்தினம் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை ஒரு அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தால், அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!