News June 9, 2024
குருப் 4 தேர்வில் 10137 பேர் தேர்வு எழுதவில்லை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் தாலுகாவில் 1,420 பேரும், குமாரபாளையம் தாலுகாவில் 606 பேரும், மோகனூரில் 431 பேரும், ப.வேலூரில் 1,008 பேரும், ராசிபுரத்தில் 2,630 பேரும், சேந்தமங்கலத்தில் 856 பேரும், திருச்செங்கோட்டில் 2,186 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 10,137 பேர் தேர்வு எழுத வரவில்லை.
Similar News
News September 15, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் நேற்று (செப். 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.20 என நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்திருப்பதால், இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களுக்குப் பிறகு, முட்டை விலை 5 காசுகள் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News September 15, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.14 நாமக்கல்-( ராஜமோகன் -9442256423 ) ,வேலூர் -( ரவி -9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி -9498169110 ), திம்மநாயக்கன்பட்டி -(ரவி -9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News September 14, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (14.09.2025) இரவு ரோந்து பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் உட்கோட்ட அதிகாரியை நியமிக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் வழியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.