News April 28, 2025

குருபர அள்ளி கிணற்றில் விழுந்த முதியவர்

image

மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருபர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மந்திரி(55). உணவு சாப்பிட்டு  கைகழுவ சென்றபோது இவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.  அரூர் தீயனைப்பு துறையினர், இவரது உடலை மீட்டு அரூர் G.H. க்கு அனுப்பி வைத்தனர். இவரது இறப்பு குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

தருமபுரி: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

தருமபுரி பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>> பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க மக்களே!

News September 18, 2025

தர்மபுரியில் நூதன மோசடி… உஷார்!

image

பென்னாகரம் ஏரியூர் பகுதியில் அசோக் என்ற இளைஞருக்கு 8046852000 என்ற எண்ணில் இருந்து கால் வந்தது. யூபரில் இருசக்கர வாகனம் மூலம் ரைடர்ராக பணியை தொடங்கி மாதத்திற்கு 40 முதல் 60 ஆயிரம் வரை பணம் சம்பாதிக்கலாம் என கூறி பதிவு செய்ய 2000 ரூபாய் பணம் கட்ட வேண்டி இருப்பதாக கூறி மோசடி செய்துள்ளனர். யூபர் செயலில் பணிபுரிய முன்பணம் தேவையில்லை. இது போன்ற மோசடிகளில் ஏமாந்தால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

News September 18, 2025

தருமபுரி: வரப் போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

image

தருமபுரி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!