News February 9, 2026
கும்மிடிப்பூண்டியில் ரயிலில் இருந்து குதித்து பலி!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் இருந்து கடந்த பிப்.4ஆம் தேதி சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயிலில் சில வடமாநில இளைஞர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களை ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் பயந்துபோன ஒரு இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், நேற்று(பிப்.8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News February 11, 2026
திருவள்ளூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 11, 2026
திருவள்ளூரில் பயங்கர தீ விபத்து!

திருவள்ளூர் அடுத்த பட்டறைபெருமத்தூர் பகுதியில் திருப்பதி நெடுஞ்சாலை சுங்கச்சவாடி செயல்பட்டு வருகிறது. அதில், பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வெடுக்கும் கண்டெய்னர் அறையில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீப் பிடித்தது. பணியில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அறையில், சாமிப் படத்திற்காக ஏற்றப்பட்ட விளக்கில் இருந்து தீப் பிடித்தது தெரிய வந்தது.
News February 11, 2026
திருத்தணி பகுதிகளில் மின் தடை!

திருநின்றவூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று(பிப்.11) காலை 9:00 – மாலை 5:00 வரை நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர், பாலாஜி நகர், நடுக்குத்தகை, சி.டி.எச்.ரோடு, வேப்பம்பட்டு, அயத்தூர், இந்திரா நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், அரண்வாயல் குப்பம், பெரியார் நகர், நாசிக் நகர், பாக்கம், புட்லூர், கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. <<19106967>>தொடர்ச்சி<<>>


