News February 1, 2025
கும்பகோணம்: விபத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் பலி

கும்பகோணம் அருகே இரண்டாம் கட்டளை பகுதியை சோ்ந்தவா் கருணாகரன் (43). கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக உதவியாளராக பணியாற்றும் இவர், நேற்று (ஜன.31) உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு தன் டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரைக்கால் மெயின்ரோடு சீனிவாசநல்லூா் பகுதியில் எதிரே வந்த டூவீலர் கருணாகரன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News April 21, 2025
லாரி மோதியதில் இளைஞர் பரிதாப பலி

திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் சுதாகர் (25). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்தார். மனக்கரம்பை முதன்மைச் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியதில் ஆல்வின் பலத்த காயமடைந்தார். உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
News April 20, 2025
தஞ்சை; 12th பாஸ் போதும், ரூ.25,000 சம்பளத்தில் வேலை

தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் Digital Marketing Manager பணியில் உள்ள 20 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News April 20, 2025
கடன் பிரச்சனை தீர்க்கும் வைரவர்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ளது அருள்மிகு வைரவன் திருக்கோயில். வேண்டியது நினைத்து சாமிக்கு வஸ்திரம், சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வேண்டினால் கர்மவினைகள் தீர்ந்து விடும், கடன் பிரச்சனை, திருமண தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் வைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க