News November 20, 2024
குமாரபாளையத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல்: குமாரபாளையம் பகுதியில் அதிகளவு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கல்லூரி பகுதியில் போதை மாத்திரைகளை விற்று வந்த சீனிவாசன், ஸ்ரீதர், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவர்களை நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News September 11, 2025
நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோ ரூ.110- ஆக நிர்ணயம்!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
News September 11, 2025
நாமக்கல் மாவட்டத்தில் 188.20 மிமீ மழை பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் செப்-11ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: எருமப்பட்டி 5 மி.மீ, குமாரபாளையம் 10.80 மி.மீ, மோகனூர் 6.50 மி.மீ, நாமக்கல் 6 மி.மீ, பரமத்திவேலூர் 4 மிமீ, புதுச்சத்திரம் 43 மி.மீ, ராசிபுரம் 5 மி.மீ, சேந்தமங்கலம் 41 மி.மீ, திருச்செங்கோடு 36.40 மி.மீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 28 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 2.50 மி.மீ என மொத்தம் 188.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது
News September 11, 2025
நாமக்கல்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

நாமக்கல் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <