News October 26, 2025
குமரி: 6 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்

நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உதவி ஆய்வாளர்கள் நெல்லை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். னேலும் 5 பேர் மற்ற காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News October 28, 2025
குமரி: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை

குமரி மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <
News October 28, 2025
குமரி: கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு

குமரி ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பு:- தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தாலோ, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலோ, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தலோ வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை 1077, 04652 231077, 9384056205 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE!
News October 28, 2025
குமரி: அறுவடை இயந்திரத்தால் வாலிபருக்கு நேர்ந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. நெல் அறுவடை இயந்திரத்தை நேற்று சுத்தம் செய்த கொண்டிருந்த வாலிபர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


