News November 16, 2025
குமரி: +2 படிக்கும் மகளை கர்ப்பமாக்கிய தந்தை

குமரி எல்லை செறியகொல்லா பகுதி தேங்காய் வியாபாரி சுரேஷின் 17 வயது மகளான +2 படிக்கும் மாணவிக்கு, 2 மாதத்திற்கு முன் திருவனந்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் தந்தையே மகள் என்றும் பாராமல் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. நேற்று போலீசார் சுரேஷை போக்சோ சட்டப்படி கைது செய்தனர்.
Similar News
News November 16, 2025
குமரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News November 16, 2025
தற்காலிக பாதை அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையான் கோவில் தெப்பக்குளத்தின் பக்க சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்நிலையில் இன்று தெப்பகுளத்தின் கருங்கல் சுவர்களை சரி செய்ய கட்டுமான பணிக்காக போக்குவரத்திற்கு தற்காலிக பாதை அமைக்கும்பணி
நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்கவும், மேலும் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் இந்து இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
News November 15, 2025
BREAKING குமரியில் மிககனமழை; ஆட்சியருக்கு அறிவுறுத்தல்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ஆட்சியர்களுக்கு மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


