News January 3, 2026

குமரி: 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

image

கருங்கல் அருகே திப்பிரமலை நெடுவிளையை சேர்ந்த தம்பதி ஜெறின் (41) – உஷா (32). இவர்களுக்கு ஒரு மகனும் (6), ஒரு மகளும் (5) உள்ளனர். சம்பவத்தன்று இரவு ஜெறின் அருகில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனைக்கு சென்று, பின்னர் ஜெறின் திரும்ப வந்த போது மனைவியையும், 2 குழந்தைகளையும் காணவில்லை. மனைவியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதுகுறித்து ஜெறின் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 7, 2026

பள்ளி வாகனம் மீது டெம்போ மோதி விபத்து

image

திருவட்டார் அருகே வேர்கிளம்பி பகுதியில் நேற்று மாலை பள்ளி வாகனமும் டெம்போவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 மாணவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 6, 2026

குமரி: இனி வரி செலுத்துவது ரொம்ப ஈஸி

image

குமரி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து அனைத்து சேவைகளையும் பெறலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களது நண்பர்களுக்கு Share பண்ணுங்க.

News January 6, 2026

குமரி: தி.மு.க. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேர் திருவிழாவில் பக்தர்களை அவதூறாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் இன்று (ஜன.6) புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அவர்களுடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர்.

error: Content is protected !!