News February 11, 2026
குமரி: 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

செண்பகராமன் புதூர் அரசியல் காலனியை சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மகள் மீனாட்சி (15). இவர் செண்பகராமன் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 20 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததால் மீனாட்சி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். .
News February 11, 2026
குமரி: கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

கன்னியாகுமரி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
குமரி: இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

தெள்ளாந்தியை சேர்ந்தவர் ஜாவின் பிரபாகர் (31). இவருக்கு திருமணமாக வில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த இவருக்கு மனநலம் பாதிப்பும் இருந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் விஷம் குடித்தார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.


