News October 19, 2025
குமரி: வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

கண்டன்விளை பெயிண்டர் அன்பழகன் என்ற அன்பு (54). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று இவருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க உறவினர் ஒருவர் சென்றபோது வீட்டில் நாற்காலியில் இறந்து அழுகிய நிலையில் இவர் காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.
Similar News
News October 19, 2025
நலன் காக்கும் ஸ்டாலின் முகாமில் 18,244 பேர் பயன்

நேற்று (அக்.18) மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்ததாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. முதற்கட்டமாக 10 முகாம்கள் நடந்துள்ளது. 17 உயர் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் மருத்துவ சேவை அளித்து வருகின்றனர். 5,430 ஆண்,12,814 பெண் என மொத்தம் 18,244 பேர் பயனடைதுள்ளனர். பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் என்றார்.
News October 19, 2025
குமரி: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

குமரி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <
News October 19, 2025
குமரி: வெங்கடாஜலபதி கோயிலில் நாளை தீபாவளி ஆஸ்தானம்

திருப்பதியில் ஆண்டுந்தோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருவது போல், கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலிலும் தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நாளை நடைபெறும். நாளை சுப்ரபாதம் நிகழ்ச்சியும், தொடர்ந்து விசேஷ பூஜைகள், சிறப்பு வழி பாடுகளும் நடைபெறும். சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து, மலர் அலங்காரம், பூலங்கி சேவை, தீபாராதனை ஆகியன நடைபெறும்