News April 8, 2024
குமரி: வீடு வீடாக தபால் வாக்கு சேகரிக்கும் பணி

குமரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்கு பெட்டியில் வாக்கு சீட்டு கொடுத்து ஓட்டு பெற்று வருகின்றனர். அதன்படி, மாவடத்தில் 2,546 மாற்றுத்திறனாளிகளும், முதியோர் 3,982 பேரும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
Similar News
News November 3, 2025
குமரி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 3, 2025
அருமனை அருகே நூதன முறையில் கடத்தல்

புலியூர்சாலை சோதனை சாவடியில் நேற்று அருமனை போலீசார் அவ்வழியாக வந்த மினி டெம்போவை சோதனை செய்தனர். அதில் மேல் பகுதியில் மரத்தூள் மூடைகள் அடுக்கப்பட்டு இருந்தன. போலீசார் அதன் கீழ் இருந்த மூடைகளை சோதனை செய்ய முயன்ற போது வாகனத்தில் இருந்த ஓட்டுநர், உடன் இருந்தோர் தப்பி சென்றனர். அதில் சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறையினரிடம் அரிசி, வாகனம் ஒப்படைக்கப்பட்டது.
News November 3, 2025
குமரியில் ஊராட்சி செயலாளர் வேலை அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களில் காலியாக உள்ள 30 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதில் கல்வி தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக நவ.9 அன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.


