News December 25, 2025
குமரி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!

கொடுப்பைக்குழி கட்டிடத்தொழிலாளி சந்திரன் (50). திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
Similar News
News December 27, 2025
குமரி: ரேஷன் கார்ட் இருக்கா… கலெக்டர் முக்கிய அறிவிப்பு…

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார். ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க
News December 27, 2025
குமரி: ஆற்றில் குதித்த புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

முதுகுமெல் பகுதியை சேர்ந்த இவாஞ்ஜெறி (28) சட்டம் படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது. இந்நிலையில் இவாஞ்ஜெறி டிச.24ம் தேதி குழித்துறையில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதியில் மது அருந்தி கொண்டிருந்த நிலையில் போதை தலைக்கு ஏறியதால் தாமிரபரணி ஆற்றில் குதித்தார். 2 நாட்களாக தீயணைப்புத் துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று கமுகனூர் ஆற்றில் சடலமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை.
News December 27, 2025
குமரி: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை..!

குமரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச.31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <


