News February 8, 2026
குமரி: விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

குமரி, காடேற்றியை சேர்ந்தவர் சந்திரன் (66). விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது மனைவி உயிரிழந்தார். இதனால் வேதனையில் இருந்து வந்த சந்திரன் நேற்று அவரது மனைவி கல்லறையின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News February 8, 2026
குமரியில் காவல் இரவு ரோந்து அதிகாரிகள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (08.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News February 8, 2026
குமரி: இனி தவறாக அனுப்பிய Payment-ஐ திரும்ப பெறலாம்!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT
News February 8, 2026
குமரி மாவட்ட வாட்டாச்சியர்/கோட்டாச்சியர் எண்கள்!

1. பத்மநாப்புரம் (சார் நிலை ஆட்சியர்) – 04651250722
2. நாகர்கோவில் (கோட்டாட்சியர்) – 04652279833
3. அகஸ்தீஸ்வரம் – 04652233167
4. தோவாளை – 04652282224
5. கல்குளம் – 04651250724
6. விளவங்கோடு – 04651260232
7. கிள்ளியூர் – இமெயில் – thrkir.kkm@tn.gov.in
8. திருவட்டார் – இமெயில் – tahsildarthiruvattar@gmail.com
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.


