News July 10, 2025
குமரி விவசாயிகளே: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, குமரி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.
Similar News
News July 11, 2025
குமரியில் சிவில் சப்ளை அலுவலகத்தில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள சிவில் சப்ளை அலுவலகத்தில் இன்று (ஜூலை.10) தமிழ்நாடு உணவு வழங்கும் துறை ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள அவருடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
News July 10, 2025
1996 முதுநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்!

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த <
News July 10, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் மட்டம் விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை10) நீர்மட்ட விவரம் : பேச்சிப்பாறை அணை – 41.81 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 70.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 13.28 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 13.38 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 406 கனஅடி, பெருஞ்சாணிக்கு 164 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.