News January 30, 2026
குமரி: வாகன ஓட்டிகளுக்கு SP எச்சரிக்கை

குமரியில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் வருவதற்கு SP உத்தரவிட்டுள்ளார். இந்த நேர கட்டுப்பாட்டை மீறி வந்த 4 கனரக வாகனங்கள் மீது நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அபராதம் விதித்தனர். இந்நிலையில் நேர கட்டுப்பாட்டை மீறி கனரக வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என SP எச்சரிக்கை.
Similar News
News February 2, 2026
குமரி: EXAM இல்லை.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News February 2, 2026
குமரி: நாளை மின் தடை பகுதிகள் அறிவிப்பு..!

நாகர்கோவில், தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம், வல்லன்குமாரன்விளை உபமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் சுங்கான்கடை, தோப்பூர், வேம்பனூர், பார்வதிபுரம், அனந்தன்நகர், புத்தேரி, இறச்சகுளம், அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், சடையன்குளம், நாவல்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
News February 2, 2026
ஆதிபராசக்தி கோவிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை

நாகர்கோவில் மாநகராட்சி கிருஷ்ணன் கோவில் ஆதிபராசக்தி கோவிலில் பெளர்ணமி விழாவை முன்னிட்டு நேற்று (பிப் – 1) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.


