News June 7, 2024
குமரி வந்த 2,200 டன் ரேசன் அரிசி

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2,200 டன் ரேசன் அரிசி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 39 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று(ஜூன் 6) கோட்டார் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. பின்னர் வேகன்களில் இருந்து அரிசி மூடைகளை லாரி களில் தொழிலாளர்கள் ஏற்றினர். லாரிகளில் அரிசி மூடைகள் உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.
Similar News
News August 15, 2025
குமரியில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் தொடக்கம்

குமரி மாவட்டத்தில் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் மூலம் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மூன்று இடங்களில் நடைபெற உள்ளது. நாகர்கோவிலில் அமைந்துள்ள குறளகத்திலும், பொற்றையடியில் அமைந்துள்ள உலக திருக்குறள் சமுதாய மையம் , தோவாளையில் அமைந்துள்ள திருக்குறள் வாழ்வியல் பயிற்சி மையத்திலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
குமரி மக்களே இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 14, 2025
குமரி: கணவரால் பிரச்சனையா.? உடனே CALL .!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04652-278404-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!