News March 21, 2024
குமரி: ரூ.10.20 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இன்று நாகர்கோவில் அடுத்த புத்தேரி பாலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 1.55 லட்சம் ரூபாயை கணேஷ் என்பவரிடம் இருந்து பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது வரை நடத்திய பறக்கும் படை சோதனையில் ரூ.10.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
குமரி: ரூ.3 லட்சம் ஊதியத்தில் வேலை

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.<
News September 6, 2025
குமரி: முக்கிய கோவிலில் நேர மாற்றம்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் வழக்கம் போல் நாளை (செப்.7) மாலையில் 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்காக ஆதிகேசவப்பெருமாள் சன்னதியில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் தீபாராதனை சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என்றும், தொடர்ந்து கிருஷ்ணன், அய்யப்பசாமி சன்னதிகளில் தீபாராதனை நடக்கும். பின்னர் மாலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
குமரி: கடலில் பகுதியில் சடலம் மீட்பு

ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரது உடல் கடலில் இறந்த நிலையில் மிதப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை மீட்டனர். இறந்து போன அந்த நபர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரி பள்ளத்திற்கு கடலோர காவல் குழும போலீசார் இன்று அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.