News April 22, 2024
குமரி: முருகன் கோயிலில் நிலாச்சோறு விருந்து

குமரி மாவட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி நாளான நாளை(ஏப்.23) காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30க்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கலச பூஜை, வேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியன நடக்கிறது. வெள்ளி அங்கி சார்த்தி சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து லட்சார்ச்சனை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நிலாச்சோறு விருந்து தொடங்குகிறது.
Similar News
News January 1, 2026
குமரி: டூவீலர் விபத்தில் முதியவர் பலி

மூலச்சல் பகுதி சுதாமணி (55) தனது பேரன் அபின்ராஜூடன் (19) டிச.30.ம் தேதி இரவு அருகில் உள்ள திருமணவிழாவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது புறத்தால்விளையை சேர்ந்த தங்கராஜ் (72) ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. தங்கராஜ் தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த 3பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தங்கராஜ் இறந்து போனார். தக்கலைபோலீசார் விசாரணை நடத்தினர்
News January 1, 2026
குமரி: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

குமரி மாவட்ட மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <
News January 1, 2026
குமரி: மது என நினைத்து மருந்து குடித்தவர் பலி!

மேல கரும்பாறையைச் சேர்ந்தவர் செல்வின் குமார் (48). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் போதையில் மது என நினைத்து களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்ததாக கூறப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து போனார். இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


