News September 27, 2025
குமரி: மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நபர் உயிரிழப்பு

ரீத்தாபுரம் கடம்பறவிளையைச் சேர்ந்த AC மெக்கானிக் போஸ் அலெக்ஸ்(54). நேற்று (செப். 26) இவரது வீட்டில் உள்ள இன்வெர்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், போஸ் அலெக்ஸ் ஏற்கனவே இறந்ததாக கூறினர். குளச்சல் போலீஸ் விசாரணை.
Similar News
News February 16, 2026
குமரி மாவட்டத்தில் 447 மண்டல அலுவலர்கள் நியமனம் – ஆட்சியர்

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 149 மண்டலங்கள் உள்ளன. ஒரு மண்டலத்துக்கு ஒரு மண்டல அலுவலர், ஒரு உதவி மண்டல அலுவலர், ஒரு உதவியாளர் என மொத்தம் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 149 மண்ட லத்திலும் 447 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பிறப்பித்துள்ளார்.
News February 16, 2026
கன்னியாகுமரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

கன்னியாகுமரி மக்களே, தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News February 16, 2026
குமரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க.


