News March 10, 2025
குமரி மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பில் வீட்டுமனை பட்டா, கடன் உதவி, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டது. மொத்தம் 575 மக்கள் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News November 17, 2025
குமரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கன்னியாகுமரி மக்களே; வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் கன்னியாகுமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000482, 9445000483 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News November 17, 2025
குமரி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

குமரி மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 17, 2025
குமரி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

நாகர்கோவில், மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கப்புரம், செட்டிக்குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், சவேரியார் கோவில் சந்திப்பு, சரலூர், வேதநகர் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. SHARE IT


