News September 13, 2024
குமரி மாவட்ட அணைகளுக்கு நீர் வரத்து விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 646 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 223 கன அடியும், சிற்றாறு 1 அணைக்கு 126 கனஅடியும், சிற்றாறு 2 அணைக்கு 5 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கன அடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 410 கனஅடி நீரும், சிற்றாறு 1 அணையில் இருந்து 150 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
குமரி: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

குமரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 28, 2025
குமரி: போதையில் கீழே விழுந்து ஊழியர் பலி!

திருவனந்தபுரம் அருகே அருவிக்கரையைச் சேர்ந்தவர் புகாரி (52). இவர் தற்போது கல்லுக் கூட்டம் என்ற இடத்தில் வசித்து வந்தார். கோழிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் எற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
News December 28, 2025
குமரி: தொழிலாளி மீது இளைஞர்கள் தாக்குதல்!

குமரி மாவட்டம், கருங்கல் பகுதியை சோ்ந்தவா் டேவிட்ராஜ் (55). தொழிலாளி. அதே பகுதியை சோ்ந்த கிறிஸ்துராஜ் (25), சபா்ஜேம்ஸ் (23) ஆகிய இருவருக்கும் டேவிட்ராஜுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இளைஞர்கள் இருவரும் சேர்ந்து டேவிட்ராஜ்யை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் இருவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


