News February 9, 2025
குமரி மாவட்டத்தில் 47 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது அருந்திக் கொண்டிருந்த 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
தற்காலிக பாதை அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையான் கோவில் தெப்பக்குளத்தின் பக்க சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்நிலையில் இன்று தெப்பகுளத்தின் கருங்கல் சுவர்களை சரி செய்ய கட்டுமான பணிக்காக போக்குவரத்திற்கு தற்காலிக பாதை அமைக்கும்பணி
நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்கவும், மேலும் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் இந்து இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
News November 15, 2025
BREAKING குமரியில் மிககனமழை; ஆட்சியருக்கு அறிவுறுத்தல்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ஆட்சியர்களுக்கு மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 15, 2025
குமரி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<


