News September 29, 2024

குமரி மாவட்டத்தில் 304 கடைகளின் உரிமம் ரத்து

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளில் போலீசாரும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மாவட்டத்தில் 304 கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அந்தக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (செப்.28) தெரிவித்தனர்.

Similar News

News August 18, 2025

நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில்..!

image

திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இம்மாதம் 27 மற்றும் செப்டம்பர் 3 தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதே போல் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இம்மாதம் 28, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.

News August 18, 2025

ஆதிதிராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ பயிற்சி

image

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு (Certification in videography and video Editing) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம்.

News August 18, 2025

குமரியில் ஆக.20 உள்ளூர் விடுமுறை!

image

ஸ்ரீநாராயண குரு பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம். விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

error: Content is protected !!