News December 11, 2025
குமரி மாவட்டத்தில் புதிதாக 212 வாக்குச்சாவடிகள் அமைப்பு

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 212 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மாவட்டத்தில் 1702 வாக்கு சாவடிகள் உள்ள நிலையில் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனுடன் சேர்த்து மாவட்டத்தில் தற்போது 1914 வாக்குச்சாவடிகள் உள்ளன.
Similar News
News March 6, 2026
குமரி: கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி.!

புதுக்கடை அருகே தவிட்ட விளையை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 65). இவர் தனது மகள் சுஜாவின் வீட்டில் நின்ற புளிய மரத்தில் புளிப்பறிப்பதற்காக ஏறினார். அப்போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 6, 2026
குமரி: SI உட்பட 21 போலீசார் இடமாற்றம்; SP உத்தரவு

சட்டமன்ற தேர்தலை ஒட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் ஏற்கனவே மாற்றப்பட்டனர். இந்நிலையில் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர், ஒரே நாளில் 21 பேரை இடமாற்றம் செய்து SP ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
News March 5, 2026
குமரி : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

கன்னியாகுமரி மக்களே, இங்<


