News December 19, 2025
குமரி மாவட்டத்தில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

குமரியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
கன்னியாகுமரி – 28181,
நாகர்கோவில் – 27856,
குளச்சல் -25366
பத்மநாபபுரம் -21684
விளவங்கோடு -28396
கிள்ளியூர் -21890.
இவர்களில் இறந்த வாக்காளர்கள் – 56950. இரட்டை பதிவு கொண்டவர்கள் 11849, குடி பெயர்ந்தவர்கள் 75849, கண்டறிய இயலாத மற்றும் குடியிருப்பு பகுதியில் வசிக்காதவர்கள் 8474.
Similar News
News December 20, 2025
குமரி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 20, 2025
குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் சஸ்பெண்ட்

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (58). இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வந்த புகாரை அடுத்து அவர் மீது பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். மேலும், கல்வித்துறை அதிகாரிகள் சுந்தர்ராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
News December 20, 2025
குமரி: மனைவியை கத்தியால் குத்திய கணவன்

மார்த்தாண்டான் துறை மீன்பிடி தொழிலாளி வின்செண்ட்(37). இவரது மனைவி ராஜி. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் வின்செண்ட் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனைவியின் மார்பில் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் குழித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராஜி அளித்தபுகாரின் பேரில் போலீசார் வின்செண்டை கைது செய்தனர்.


