News March 24, 2025
குமரி மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(மார்ச் 24) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரி, கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு 103வது நாளாக தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது#காலை 10:30 மணிக்கு தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி கொடுப்பதை கண்டித்து ராணி தோட்டம் TNSTC தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் CITU ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
Similar News
News April 10, 2025
குமரியில் கண்பார்வை குறைபாடு தீர்க்கும் கோயில்

சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் கண்பார்வை குறைபாடு நீக்கும் கண்டன் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட யாரோ ஒருவர் அவர் கண்ணில் மையை தடவியுள்ளார். பின்னர் அவருக்கு பார்வையும் வந்துள்ளது. கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்று பெயருடன் அழைக்கப்படுகிறார்.
News April 10, 2025
கன்னியாகுமரி: அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே(ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<
News April 10, 2025
குமரி கடலில் பேரலைகள் எழுவதற்கு வாய்ப்பு – எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பேரலைகள் எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரலைகள் அடிக்கடி எழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.