News January 2, 2026
குமரி: போலீஸ் பெயரில் மோசடி.. மக்களே உஷார்!

குமரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், குமரியில் காவல்துறை அதிகாரிகளின் பெயரையோ (அ) அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டியோ, வேறு வகையில் தொடர்பில் இருப்பதாக கூறி யாரேனும் மோசடியில் ஈடுபட்டாலோ (அ) தவறாக பயன்படுத்தினாலோ கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீஸ் எஸ்.பி-யின் வாட்சப் எண்ணிற்கு (81222 23319) புகார் அளிக்கலாம்.
Similar News
News January 7, 2026
பள்ளி வாகனம் மீது டெம்போ மோதி விபத்து

திருவட்டார் அருகே வேர்கிளம்பி பகுதியில் நேற்று மாலை பள்ளி வாகனமும் டெம்போவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 மாணவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 6, 2026
குமரி: இனி வரி செலுத்துவது ரொம்ப ஈஸி

குமரி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News January 6, 2026
குமரி: தி.மு.க. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேர் திருவிழாவில் பக்தர்களை அவதூறாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் இன்று (ஜன.6) புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அவர்களுடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர்.


