News October 31, 2025

குமரி: பயிற்சி ஆசிரியரால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

image

பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் டேக்வாண்டோ மையத்தில் பயிற்சி ஆசிரியராக இருந்து பயிற்சி வழங்கி வந்துள்ளார். மதுரையில் நடந்த போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற போது ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மதுரைக்கு மாற்றம் செய்துள்ளனர்.

Similar News

News October 31, 2025

குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News October 31, 2025

குமரி: ஒருவர் அடித்துக் கொலை

image

குமரி மாவட்டம் தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் சுடுகாடு ஓரத்தில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் குமாரகோயில் அருகே பிரம்மபுரம் என்ற இடத்தை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (35) என்ற டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News October 31, 2025

குமரி: 12th படித்தால் கிராமப்புற வங்கியில் வேலை உறுதி!

image

குமரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE IT.

error: Content is protected !!