News April 10, 2024
குமரி: நில புரோக்கர் வீட்டில் 3 லட்சம் கொள்ளை

குளச்சல் அருகே உள்ள சாஸ்தான் கரை பகுதியை சேர்ந்தவர் கார்லுஸ். நில புரோக்கரான இவர் நில விற்பனையில் கிடைத்த 3 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படைக்கு பயந்து வங்கிக்கு கொண்டு செல்லாமல் வீட்டில் வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர். அவர் கொடுத்த புகாரின்பேரில், சிசிடிவியில் பதிவான 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு குளச்சல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 13, 2026
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 13, 2026
குமரியில் நாளை அவசரகால மின்தடை

குமரி மாவட்டத்தில் நாளை (பிப்.14) சில அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக தெங்கம் புதூர், ராஜாக்கமங்கலம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய உப மின் நிலையங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த மின்பாதையில் மின்னோட்டம் இருக்காது என கருதி பொதுமக்கள் மின்னூட்டிகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 13, 2026
குமரி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

குமரி மாவட்ட மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க


