News June 6, 2024

குமரி: நில அதிர்வால் அச்சம்!

image

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட குண்டல், சுவாமிநாதபுரம், சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று(ஜூன் 5) இரவு லேசான நிலவு அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாத போதிலும் நில அதிர்வினை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர்.

Similar News

News April 21, 2025

ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை திருட்டு

image

ஈத்தாமொழி அருகே பெரிய விளையைச் சேர்ந்தவர் காந்திமதி(70). ஈஸ்டர் பண்டிகையொட்டி நாகர்கோவில் நேசமணி நகரில் உள்ள ஆலயத்திற்கு வந்தார். பிரார்த்தனை முடிந்து அவர் பஸ்ஸில் ஏறி டெரிக் சந்திப்புக்கு சென்ற நிலையில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்த நிலையில் நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2025

கல்கத்தாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்றவர் கைது

image

கல்கத்தாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருசடி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆரல்வாய்மொழி குருசடி பகுதி சேர்ந்த ஜான் பெஞ்சமின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News April 20, 2025

இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE* பண்ணுங்க

error: Content is protected !!