News January 28, 2026
குமரி: தோட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகம், கார்த்திகை வடலி என்ற இடத்தில் குளத்தின் கரையில் உள்ள தென்னந்தோட்டத்தில் ஒருவர் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News February 2, 2026
குமரி: நாளை மின் தடை பகுதிகள் அறிவிப்பு..!

நாகர்கோவில், தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம், வல்லன்குமாரன்விளை உபமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் சுங்கான்கடை, தோப்பூர், வேம்பனூர், பார்வதிபுரம், அனந்தன்நகர், புத்தேரி, இறச்சகுளம், அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், சடையன்குளம், நாவல்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
News February 2, 2026
ஆதிபராசக்தி கோவிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை

நாகர்கோவில் மாநகராட்சி கிருஷ்ணன் கோவில் ஆதிபராசக்தி கோவிலில் பெளர்ணமி விழாவை முன்னிட்டு நேற்று (பிப் – 1) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
News February 1, 2026
குமரி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


