News January 8, 2025
குமரி: தாமதமின்றி வழக்குப் பதிவு செய்ய எஸ்பி உத்தரவு

கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு, நகை பறிப்பு போன்ற பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது முறையாக வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தி, காலதாமதம் இன்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 31, 2026
குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 31, 2026
குமரி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

குமரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இங்கு<
News January 31, 2026
குமரி: நகை கடையில் நூதன முறையில் திருட்டு

காஞ்சிரம்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ மணிகண்டன். இவர் சாங்கை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என இருவர் வந்துள்ளனர். இருவரும் நகை வாங்குவது போல் நடித்து மூன்று கிராம் மோதிரம் மற்றும் கம்மலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


