News December 23, 2025

குமரி: தவெக நிர்வாகி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

image

களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின் (25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 25, 2025

குமரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE பண்ணுங்க.

News December 25, 2025

குமரி: ரயில் மீது கல் வீசிய சிறுவன் கைது

image

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

News December 25, 2025

குமரி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!

image

கொடுப்பைக்குழி கட்டிடத்தொழிலாளி சந்திரன் (50). திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!